Thursday, April 18, 2013

சோக உப்பு :-))

அவர் என்னுடைய கேப் நண்பர், அதாவது என்னுடன் காரில் தினமும் அலுவலகம் செல்லும் ஒரு சக பயணி- உடன் பணியாற்றுபவர்!

தினமும் ஏதாவது பேசியபடியே செல்லுவது என் வழக்கம், காரில் யாரேனும் அமைதியாய் இருந்தால் எனக்குத் தாங்காது, உடனே, அவர்களிடம் ஏதாவது பேசி வம்பிழுத்து கலகலப்பாக்கி விட்டு தான் வேறு வேலை எனக்கு!

அன்றும் அப்படி தான், அந்த நண்பர் கொஞ்சம் சோகமாக முகத்தை வைத்திருந்தார், என்ன சார், ஏன் இவ்வுளவு அமைதியா வர்றீங்கன்னு கேட்டேன்

அதுக்கு அவர் புலம்பியது இது தான்," அட நீங்க வேற ப்ரதிபா, வீட்ல இம்சை தாங்கல, முந்தி எல்லாம், அம்மா சமைப்பாங்க, பெரும்பாலும் நல்லா தான் செய்வாங்க, ஆனா என் மேல ஏதாவது கோபம் இருந்திச்சின்னா, சாம்பார்ல ஒரே உப்பு தான், அத அவங்களும் தான் சாப்பிடணும்ன்னு நினைக்க மாட்டாங்க.

அப்புறம் வீட்ல உட்கார்ந்து டிவி பார்க்க முடியாது
வேணும்ன்னே பாத்திரம் பலமா உடையும், ஒரே சத்தமா இருக்கும்.

அதுனாலேயே நான் பொதுவா வீட்ல அமைதியா போய்டுறது, ஆனா இப்போ பாருங்க, அப்படியே என் அம்மாவ பார்த்து என் பொண்டாட்டியும் அதையே செய்றா! நேத்து நைட் சம்பாத்தி குருமால பயங்கர உப்பு...

என்னத்த சொல்ல என்று ... புலம்பிக் கொண்டே வந்தார்.... எனக்கு ஒரு பக்கம் அநியாயமாய் சிரிப்பு வேறு, ஆனாலும் கஷ்டப் பட்டு சிரிப்ப வெளிகாட்டாம நல்ல புள்ளையா உட்கார்ந்திருந்தேன்!

மதுர பொண்ணு

1 comment: