Wednesday, April 17, 2013
மனிதவளம் (human resources)
மனிதர்கள் பொதுவா ரெண்டு விதம் தான், கொடுக்கிற விதம் ஒண்ணு, கொடுக்குறத வாங்கிக்கிற விதம் இன்னொன்னு... எல்லாருமே நல்லவங்க தான்..
ஆனா எப்பப்போ, எப்படி செயல்படுறதுன்னு சில குழப்பங்கள்...
பொதுவா நம்ம பள்ளிகளில், கல்லூரிகளில் சுய கட்டுப்பாடு, கோபம் தணிக்கும் செயல் திறன், பேசும் முறை- இவை போன்ற சுய முன்னேற்ற படிப்புகள் கிடையாது!
இருக்கறத படிக்கவே கஷ்டமா இருக்கு, இதுல இது வேறயான்னு நீங்க புலம்புறது கேக்குது!
அறிவு - எல்லோருக்கும் உண்டு, கடவுள் கொடுத்த மூளையை எல்லாரும் நல்ல உபயோகப் படுத்துறாங்க, ஆனா எல்லாரும் தோற்கும் ஒரு இடம், மனிதவளம் (human resources)
மனிதர்கள்- இவங்க கிட்ட பேசணும், பழகனும், ஒத்து போகாட்டியும் ஒரு மேலோட்டமான உறவு இருக்கணும், யார் மனசையும் கஷ்டப் படுத்தாம பேசணும், எல்லா மனிதரையும் ஒரே மாதிரி பார்க்கணும்.
சமூகம் சுமூகமா இருக்கணும்,
இது போன்ற கல்வித்திட்டங்கள் வந்தா நல்லா இருக்கும், ஏற்கனவே சிலது இருக்கு, ஆனா, அவங்க தங்கள் கம்பெனி முன்னேற்றத்த மட்டுமே பார்க்கிறாங்க!!!
இதை நம்மளா தான் செஞ்சிக்க வேண்டியதா இருக்கு- அதற்கு என்ன வழி அப்படின்னா?
புத்தகங்கள் தான், வேற வழியே இல்ல,நல்ல புத்தகங்கள் பல்கலைகழகங்கள் அப்படின்னு சொல்றது உண்மை தான்
இது போன்ற கல்வி முறை செயல்பாட்டில் வந்தா இன்னும் நல்லா இருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
இப்படி அறிவுக் கண்ணை எக்குத் தப்பா திறந்துட்டீங்க... :)) நான் சமீபமா நிறைய புத்தகம் மற்றும் இந்த மாதிரி பதிவுகள் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன்... :)
ReplyDelete