Thursday, May 23, 2013

காலம் மாற்றி விடும் வலியை

காதலில் தோல்வியுற்ற பெண்கள் பல மாதங்களுக்கு பைத்தியம் போல இருப்பார்கள், பல காலம் ஹாஸ்டலில் இருந்ததால், இவ்வாறு அடி வாங்கிய பெண்கள் நடை பிணம் போல் இருப்பதை பார்த்திருக்கிறேன்....
ஆனால், பெரும்பாலும் அவர்கள் உணராதது இந்த கடின மன வலி காலப் போக்கில் குறையும் என்பது தான், ஒரு நாள் இதே போல் காதலில் தோல்வி அடைந்த ஒரு தோழிக்கு ஆறுதல் சொல்ல நேர்ந்தது, மிகவும் நல்ல பெண், அழகாகவும் இருப்பாள், டெல்லியை சேர்ந்தவள், ஆனால் அழகிலோ, அறிவிலோ கொஞ்சம் கூட கர்வமில்லாமல் சிரித்துக் கொண்டே பேசும் குணம் உடையவள்
இரண்டு மாதம் நன்கு பழகிய பிறகு கேட்டு அறிந்தது, காதலித்த பையன் இவளுடன் பழகிக் கொண்டே வேறு ஒரு பெண்ணிடமும் உறவாடிக் கொண்டிருந்தது, இவளுக்கு தெரியாமலே, அந்த பெண்ணை சந்தித்தது என்று.... கடைசியில் உண்மை ஒரு தோழியின் மூலமாக தெரிந்து இவள் நொந்து நூடில்ஸ் ஆனது தான் மிச்சம். அவளிடம் ஆறுதல் என்று நான் எதுவுமே சொல்லவில்லை
கொஞ்ச நாட்கள் பொறுத்திரு- என்று மட்டும் சொன்னேன், ஆனால் இல்ல இந்த துரோகத்த மறக்கவே முடியாது ப்ரதி என்று பலவாறு புலம்பினாள். ஒரு ஆறு மாதம் கழித்து இதைப் பற்றி உன்னுடன் பேசுகிறேன் என்று விட்டு அமைதியாகி விட்டேன்
ஹைதராபாத் விட்டு வர நேர்ந்தது, பல மாதங்கள் தொலைபேசி தொடர்பே இல்லை, ஜனவரி மாதம் ஒரு நாள் கால் செய்தாள், என்னவென்று கேட்டால், கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு, ஆனா டெல்லில , நீ கண்டிப்பா வரணும்ன்னு....
 உனக்கு சந்தோஷமா என்றேன், ரெம்ப பிடிச்சிருக்கு பையன, நல்ல வேல அவன் கிட்ட இருந்து தப்பிசிட்டேன் ப்ரதி, அவன கல்யாணம் பண்ணியிருந்தா, என்ன விட்டு வேற பொண்ண அப்போவும் பார்த்திருப்பான், இப்போ தான் நிம்மதியா இருக்கு என்றாள்!
அதனால், நொந்து நூடில்ஸ் ஆகி கண்ணீர் விடும் பெண்கள் ஆறு மாதம் பொறுத்திருங்கள்! காலம் மாற்றி விடும் வலியை....

No comments:

Post a Comment