Friday, November 28, 2014

கதைக்கான இசை




சமீபத்தில் இசையமைப்பாளர்கள் யாரும் பெரியதாக என்னை ஈர்க்கவில்லை, நான் பெரிய இசை மேதையோ இன்றி ஞானம் படைத்தவளோ இல்லை, இருந்தாலும் நல்லதொரு இசையை ரசிக்கப் பிடிக்கும், சமீபத்தில் சிறிதே சிறியதாய் என்னை ஈர்த்தது சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, திரும்பவும் சொல்லுகிறேன், இவரது பாடல்கள் அவ்வளவாய் ஈர்க்கவில்லை, ஆனால் பின்னணி இசையில் கலக்குகிறார். மிகவும் ஈர்த்த படம் Undoubtedly  ஜிகர்தண்டா (மதுரைக்காரியான எனக்கு ஜிகர்தான்டாவில் சிறிதும் பிடித்தமில்லை’) ஆனால் படம் கலக்கல்.

அனிருதின் இசை சிலகாலமே என்பதிலும் ஐயமில்லை, விஜய் ரசிகையானநான், கத்தி பாடல்களை கேட்பதை நிறுத்தியாயிற்று, அவரின் இசையில் எனக்கு மிகவும் விருப்பமான பாடல்கள் அனைத்தும் மூன்று படத்திலேயே இருந்தது, பிறகென்னவோ நல்ல இசையை ஆன்றீயாவை கழற்றிவிட்டது போல் கழற்றி விட்டுவிட்டார்! பாடல்கள் அனைத்தும் சென்னை என்னும் ஊரை தூக்கி வைத்து கொண்டாடியும், இல்லை என்றால் தமிழகத்தில் வேறெந்த ஊரும் இல்லாதது போலும் இசை அமைக்கிறார்! என்ன கொடுமை அய்யா இது!!!

தற்பொழுது இவர்கள் இருவரையும் பற்றி அல்ல இப்பதிவு, எனக்கு பிடித்த தேவாவின் மற்றும் ஹாரிஸின் இசைப்பற்றியது,

தேவாவிற்கும் ஹாரீசிர்க்கும் உள்ள ஒரு ஒற்றுமை இருவருமே வெள்ளைக்காரன் பாடல்களை சுட்டு இங்கே தமிழ் சுவைக்கு ஏற்றாற்போல் இசை அமைப்பார்கள் என்பது!

அது நூற்றுக்கு நூறு உண்மை, காப்பி அடிப்பதில் இவர்களை மிஞ்ச இவர்களே மறுபடியும் பிறக்க வேண்டும், அவ்வுளவு அக்கலையில் சிறந்தவர்கள் இவ்விருவரும், அதைக் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இன்றி உடனேயே செய்வார்கள், உதாரணம் சையின் கங்கணம் ஸ்டைல் பாடல் பிரபலமாய் இருந்த பொழுதே வந்த கூகிள் கூகிள் பாடலைச் சொல்லலாம்.

உலகம் முழுவதும் கண்க்னம் பாடல் பேய்த்தனமாக பரவிக்கொண்டிருந்த நிலையில் ஹாரீஸின் இந்தவொரு தைரியத்தை பாராட்ட தான் அந்தோ பரிதாபம் தமிழகத்தில் எவரும் இல்லை!

ஆனால் அது அப்பட்டமானதொரு காப்பி என்று உணர்ந்த பிறகும், அப்பாடலின் இசை நம்மைக் கவரத்தான் செய்தது, உண்மையை சொல்லவேண்டும் என்றால், சையின் கங்க்னம் ஸ்டைல் பாடலை விட இப்பாடல் அருமையாகத்தான் இருந்தது. 

அதே போல் தேவா அவர்களின் தங்க மகன் இன்று – பாட்ஷா படப்பாடலுக்கு நான் ரசிகை, நிஜமாய், அப்பாடலில் ரசினியின் முகத்தை மறந்து விட்டு வேறொரு முகத்தை ஒட்டவைத்து கொஞ்சம் கம்பீரமானதொரு ஆணைக் கற்பனை செய்து பாருங்கள், அப்பொழுது தெரியும் என்ன அருமையான பாடல் அதுவென்று.

என்ன தான் காபியும் டியும் மாறி மாறி போட்டு கொடுத்தாலும், இன்றளவும் தமிழ் படங்களில் கதைகளுக்கு ஏற்றார் போல் இசை அமைப்பதில் இவர்கள் இருவரும் மிகவும் திறமையானவர்களே! துப்பாக்கி + அந்நியன் படப்பாடல்களைச் சொல்லலாம்! அய்யங்காரு வீட்டு அழகே – அழகாய் பொருந்திப் போகும் அப்படத்தின் போக்கில்!! 

திறமையை மிகவும் மதிக்கும் தமிழர்கள், அத்திறமை வேறொரு இடத்திலிருந்து வந்தது என்றறிந்தால், எப்பேர்பட்ட மகானையும் இழிவு படுத்துவார்கள், அவ்வரிசையில். இவர்கள் காப்பி அடிப்பதாலோ என்னவோ, இவர்கள் இருவரும் நிஜமாய் நன்கு இசை அமைத்த பாடல்களுக்கு உரிய மரியாதை தரத்தயங்கியது தமிழுலகம்.
இனி தமிழ் சினிமாவில் மின்னலே பாடகள் போன்று அருமையான பாடல்கள் நிறைந்த படம் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

எல்லாம் அனிருத் போன்றவர்கள் போல், இரண்டு ராப், ரெண்டு புதுமை புகுத்தல்கள் என்பதாகவே எதிர்காலம் அமையப் போகிறது, அப்புதுமைகள் அனைத்தும் சொந்த மூளை இல்லாமல் அடுத்தவன் ஐடியாவை சுடும் typical indian வகை இசையாகவே அமைகிறது. மேற்க்கத்திய தாக்கம் மிக அதிகமாக! உண்மையில் நம் இசையில் தொன்றுதொட்டு வரும் கிராமிய பாடல்களில் புதுமையைப் புகுதுங்களேன், அந்தளவுக்கு திறமை இல்லையா? என்று கேட்டால், இல்லை என்பது தான் உண்மை!!! 

நம்மிடம் இருக்கும் விஷயங்களில் புதுமை செய்யாமல், அயல்நாட்டவனின் அறிவில் புதுமை புகுத்த எல்லோராலும் இயலும்! சிறிதளவு திறமை அத்துறையில் இருந்தால்! காப்பி மட்டும் அடிக்காமல் சொந்த இசைத்திறமையால் முன்னேறி இருந்தால், இவர்கள் இருவரும் தமிழகத்தில் சிறந்த இசை அமைப்பாளர்களுக்கு சவால் விடும் அளவிற்கு திறமை படைத்தவர்கள். 

வாலி, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை, பாட்ஷா, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற அருமையான இசையைக் கொண்டது தேவாவின் இசை, இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம் என்பது என் வருத்தம்
அதே போல் தான் ஹாரீசும். சிறந்த இசை அமைப்பாளர்கள் சிறப்பாய் இல்லாமல் போனதற்கு அடுத்தவன் மூளையில் குளிர் காய்ந்ததும் ஒரு காரணம்!!!!

இனிவரும் இசை அமைப்பாளர்களாவது புதுமையை ராப் போன்ற பஞ்ச பாடாவதி இசையில் புகுத்தாமல், நம்மிடையே இருக்கும் இசையில், வாழ்க்கை முறையில் இசையையும் அதில் நவீனத்தையும் புகுத்தலாம்! இவர் தான் சிறந்தவர் என்ற அக்கப்போர் இன்றி இணையமாவது அமைதியாய் இருக்கும்!


No comments:

Post a Comment