Monday, December 31, 2012

2012 புத்தாண்டு ---> 2013 :-)))


2012--->2013


மிகுந்த சந்தோசமாகவும், அதே சமயம் பல அடிகளையும் கொடுத்த வருடம்! உண்மையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்  நிரம்பியது. என் ஆங்கில பதிவேட்டில் பல மாற்றங்களை நான் செய்த வருடம். எழுத வேண்டும். அது போதும் என்று முடிவெடுத்ததும் இவ்வருடத்திலேயே.....


போன வருடம், இதே நாளில் பெங்களுருவில் இருந்தேன்!

 ஒரு நாள் முன்பே வரவேண்டும் என்று அன்புத்தோழிகளின் அன்புக்கட்டளை. ஒவ்வொரு வருடமும்  இங்கே செல்லவேண்டும், அங்கே உணவு உண்ண வேண்டும் என்று ஆயிரம் பிளான்ஸ் செய்வோம். ஆனால் ஊரினுள்ளே இருந்தபோதும் அது மட்டும் கைவந்ததே இல்லை.


போன வருடமும் அதே போல், ஹைதராபாத்தில் இருந்த என்னை, பெங்களூர் வந்தால் தான் ஆயிற்று என்று அன்புத்தொல்லை செய்தனர் கன்னடத்து தோழிகள்.
சரியென்று, பெங்களூர் சென்றால், முதலில், மைசூருக்கு சென்று அங்கு ஒரு ஐந்து நக்ஷத்திர ஹோட்டலில் டான்ஸ் என்பது வரை திட்டம் தீட்டி வைத்திருந்தனர் . இது என் தோழி தேஜுவின் நெடுநாளைய கனவு. இதில் எனக்கு ஷாப்பிங் வேறு. 



ஆனால் அன்று சாயங்காலம் எங்களைப்பார்க்க வந்த தோழியின் வருங்கால கணவன் விபத்தில் சிக்கி பலத்த காயம். அத்தனையும் கான்சல் செய்தோம். சரி, போகிறது என்றால், தோழியின் காதலன்  வீட்டில் இவர்கள் காதலுக்கு பயங்கர எதிர்ப்பு, பையன் தெலுகனாகவும், பெண் கன்னடாவாகவும் இருந்ததே பிரச்சனை.



இவள் அழுத அழுகையில், சரியென்று புத்தாண்டு காலையில் ஒரு சிறு அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு, மருத்துவமனை சென்றால், அங்கே பையனின் சித்தி ஒரே கத்தல். மானம், ரோஷம், குடும்பம்  அதைத்தவிர   பல கன்னடா கெட்ட வார்த்தைகளை கேட்க நேர்ந்தது. 



இவளை மட்டும் உள்ளே அனுப்பாமல், எங்கள் இருவரையும் உள்ளே அனுப்பிய அந்த சித்தியின் திறமை என்னை வியக்க வைத்தது. ஆனால், இவள் அழுது கரைகிறாளே, என்ன செய்வது என்று யோசித்தபொழுது, என் தோழி லாவண்யா, ப்ரதி, நீ தான் ரெம்ப தைரியம், நீ தெஜுவ கூட்டிட்டு உள்ளே போ என்றாள்.

என்ன தான் தைரியமான பெண்ணாக நான் இருந்தாலும், அந்த சித்தியம்மா இருந்த சைசில் எனக்கு உள்ளே உதறல் எடுத்தது உண்மை. இருந்தாலும் நம் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மென்ட் வீக் என்பதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், உள்ளே அவளை இழுத்துச்சென்றேன்.

அவ்வுளவுதான், அந்த சித்தி கத்திய கத்தில் மருத்துவமனையே கிடுகிடுத்தது. என் தோழியைப் பார்த்தால், காதலனின் அருமை அடிப்பட்ட முகத்தை பார்த்து சோகப்பதுமையாக நிற்கிறாள், கத்தல் என்னமோ நிற்கிற மாதிரி தெரியவில்லை ,என் தோழியைச்சொன்னதும் எனக்கு பொங்கியதே கோபம்.



"இல்லா, மாத்தாட பேடா, ஏனு ஆன்டி இல்லி --------- அப்படி இப்படியென்று நான் கன்னடாவில் விட்ட பிட்டரில் என் தோழியே ஒரு நிமிடம் அழுகையை விட்டு என்னை பார்த்து நிற்கிறாள்


ஒரு வழியாக, அடிப்பட்ட காதலன், செல்லுமாறு செய்கை செய்ததும், இவளும் சுயநினைவுக்கு வந்து, மெதுவாக நகர்ந்தாள், வெளியில் வந்ததும் அப்பாடி, விடுதலை என்ற உணர்வு எனக்கு.


வெளியில் வந்ததும் நானும், அவளும், லாவண்யாவும் எங்கள் முகத்தை பார்த்து நாங்களே சிரி சிரியென்று சிரித்தோம் :))


இதில் கொடுமை என்னவென்றால், அந்த அம்மா கத்தியதை விட , நான் கன்னடா பேசிய அழகே, அவளை விழுந்து விழுந்து சிரிக்கவைத்தது, என் தலை எழுத்து.
அதைச்செய்ய வேண்டும், இங்கு செல்ல வேண்டும் என்று பல விஷயங்களை திட்டம் செய்து ஒன்றுமே செய்யாமல் ஊர் வந்து சேர்ந்தாலும், இன்றும் நினைத்து சிரிக்க வைக்கின்ற புது வருடம்!


அதை தவிர்த்து, வேலையில் இருந்து ரிசைன் செய்தது! இப்பொழுது அது நான், தேவை இல்லாமல் எடுத்த முடிவாகப்படுகிறது! ஆனால் வருத்தமில்லை, அம்மா, அப்பா, அருகில் ஆறு வருடம் கழித்து இருக்கின்ற வாய்ப்பு அளித்த கடவுளுக்கு மனமார்ந்த நன்றிகள்.



இந்த வருடம் ட்விட்டரில் என் புதுவருஷம்! நாளை காலை கோவில்! மனதிற்கு பிடித்த ஒரு புத்தகம்!  போதும், என்னை மகிழ்ச்சியாக்க!


இனி எந்த தோழி அழைத்தாலும் புதுவருடம் மட்டும் :நான் ஊரிலேயே இல்லையே !!! :)) என்றே பதில் வரும்



எழுதிக்கொண்டே இருக்கவேண்டும், அது மட்டுமே புத்தாண்டு விருப்பம்
உங்கள் அனைவருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 


மதுரபொண்ணு

4 comments:

  1. அந்த தோழி காதல் , கல்யாணம் என்ன ஆச்சு ங்க ??

    ReplyDelete
  2. ''எழுதிக்கொண்டே இருக்கவேண்டும், அது மட்டுமே புத்தாண்டு விருப்பம்'' ரொம்ப சுலபமான விஷயம்தானே செஞ்சிடுங்க.
    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அவளின் திருமண நிச்சயம் முடிந்து விட்டது, அநேகமாய், இந்த வருடத்தில் இருக்கும் @jei

    ReplyDelete
  4. கண்டிப்பாக, எழுதுவதில் மேல் இருக்கும் காதல் குறைவதில்லை @avainaayagan :))

    ReplyDelete